ஆம்பூர் தாலுகா பாப்பனபல்லி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் தெருவில் கனரக வாகனங்கள் வரும்போது ஆபத்து நடக்கும் அச்சம் உள்ளது. அத்துடன் வீடுகளுக்கு வினியோகிக்கும் மின்சாரமும் சரியான மின்னழுத்தத்தில் வரவில்லை. அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் சரியாக இயங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.
-ச.கிரிதரன், பாப்பனபல்லி.