திருவண்ணாமலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் சாலை விரிவாக்கப்பணிகள் முடிவடைந்துள்ளது. வாழவச்சனூர், சதாகுப்பம் கூட்டுச்சாலையில் சிக்னல் மின்விளக்கு கம்பம் சாய்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமான சிக்னல் விளக்கு கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
-நடராஜன், சதாகுப்பம்.