பர்கூரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை உள்ளது. இந்த சாலையில் 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் ஏராளமாக சென்று வருகின்றன. கடந்த 6 மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை பெண்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாரத், பர்கூர்.