திருப்பாதிரிப்புலியூர் பழவரசன்தோட்டத்தில் உள்ள 2 மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், அருகில் உள்ள குடியிருப்பு மக்களும், கோவிலுக்கு வரும் பொதுமக்களும் ஒருவித அச்சத்துடனேயே இருக்கின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.