புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியிலிருந்து சோத்துப்பாளை செல்லும் சாலையில் அம்மையன்தெரு சந்திப்பில் குடியிருப்பு பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்திற்கு அருகில் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் புதிய மின்கம்பத்தில் இணைப்பு கொடுக்காமல் பழைய மின்கம்பத்திலேயே ஆபத்தான வகையில் மின் வினியோகம் தொடர்கிறது. காற்றடிக்கும் நேரத்தில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே புதிய மின்கம்பத்தில் இருந்து மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.