எலும்புக்கூடான மின்கம்பங்கள்

Update: 2025-10-05 13:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான் ஊரணி கிராமத்தில் விவசாய வயல்களில் செல்லும் மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கொட்டிய நிலையில், எலும்புக்கூடாய் காட்சியளிக்கின்றன. கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பழைய மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்