ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2025-09-14 15:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பொக்கிஷக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு செல்லும் பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், பாதியில் முறிந்த நிலையிலும் உள்ளது. ஒரு சில பழுதடைந்த மின்கம்பங்களுக்கு அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டும், பழுதடைந்த பழைய மின்கம்பத்திலேயே ஆபத்தான நிலையில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தின் போது காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பழைய மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பத்தில் மின் வினியோகம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்