புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள ஒசுவப்பட்டி கிராமத்தில் விவசாய வயல்கள் வழியாக உயரழுத்த மின்கம்பம் செல்கிறது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் மழை மற்றும் காற்றடிக்கும் நேரத்தில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.