ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-31 16:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியிலிருந்து சோத்துப்பாளை செல்லும் சாலையில் அம்மையன்தெரு சந்திப்பு குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் அதன் அருகில் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இன்னும் பழைய மின்கம்பத்திலேயே மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காற்றடிக்கும் நேரத்தில் பழைய மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தில் இருந்து மின் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்