ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-08-31 14:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராமத்தில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் சாலை அருகே உள்ள விவசாய மின் இணைப்பிற்கு செல்லும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கிறது. காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தின்போது உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தினை அகற்றி புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்