ஒளிராத மின்விளக்குகள்

Update: 2025-08-31 12:23 GMT

திருவிடைமருதூர் ஆடுதுறை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சென்னை-கன்னியாகுமரி வழித்தட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக மின்விளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்