உயர் கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-03 12:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் முன்பாக மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் வாரச்சந்தை போன்றவை நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமலும், வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்