திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் மாடம்பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையில் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மின்விசிறிகள் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இரவு வேளைகளில் மின் விளக்குகள் எரியாததால் பஸ் ஏற வரும் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே அங்கு விரைந்து மின்இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.