பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் உள்ள சாலையேரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும், செங்குணம் புது கருப்பு சுவாமி கோவில் நுழைவு வாயில் தென்பகுதி சாலையோர அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும் அருகே முளைத்துள்ள செடி கொடிகள் மின் கம்பத்தில் படர்ந்து உள்ளது. எனவே மழை பெய்யும்போது இந்த பகுதியில் நிலத்தில் மின்சாரம் பாயும் நிலை உள்ளது. மின்சாரம் பாயும்போது பொதுமக்களோ, கால்நடைகளோ அருகில் சென்றால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.