மின்சாரம் இன்றி மக்கள் அவதி

Update: 2025-06-29 16:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பேல்பட்டி, நந்திபுரம், ஆ.நந்திபுரம், லட்சமிபுரம், கோடிபுரம், காவேரிபுரம், நாராயணபுரம், பசுவன்புரம், கெஸ்தூர் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் மஞ்சு கொண்டபள்ளி ஊராட்சியில் 2 மாதங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இக்கிராமங்கள் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். மின்சாரம் இல்லாததால் குடிநீரின்றி தவித்து வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணி, அஞ்செட்டி.

மேலும் செய்திகள்