சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்து வயலிமிட்டா கிராமத்தில் புதிய சாலையை உயர்த்தி அமைத்தனர். இதனால் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்குகளுக்கான மின்இணைப்பு பெட்டி தாழ்வாக உள்ளது. இதனால் மின்விபத்து அபாயம் உள்ளது. எனவே மின்இணைப்பு பெட்டியை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.