ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-22 11:37 GMT

திருச்சி பெல்ஸ் கிரவுண்ட் 50-வது வார்டு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்