திருச்சி ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள காதிகிராப்ட் அருகே சாலையோரம் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கை அதன் அருகே உள்ள மரக்கிளைகள் மறைத்து உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அவதிப்படுவதுடன், இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்விளக்கை ஆக்கிரமித்து இருந்த மரக்கிளைகளை அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.