கணபதி அருகே வரதராஜபுரம் 3-வது வீதியில் மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள், அங்கு குடியிருந்து வருபவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.