கள்ளக்குறிச்சி நீலமங்கலம் காமதேனு நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட தெருமின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவு வேளையில் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தெருமின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.