மின் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-06-01 17:19 GMT

கடமலைக்குண்டு ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைக்கு மின் இணைப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக அந்த உபகரணங்களை தொட நேர்ந்தால் மின் விபத்து ஏற்பட்டு அவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே திறந்தநிலையில் கிடக்கும் பெட்டியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்