நெய்வேலி இந்திராநகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. எலும்புக்கூடு போல் காணப்படும் மின்கம்பம் தற்போது எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்விபத்து ஏதும் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.