செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை மற்றும் இரவு என அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் மின்வாரிய துறை ஊழியார்கள் விரைந்து பணியில் ஈடுபடுவதும் இல்லை. தினந்தோறும் குழந்தைகள், வயதானோர் என அனைவரும் மிகவும் அவதி அடைகிறார்கள். இதற்கு மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.