சித்தோடு சந்தைமேடு அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக ஒளிருவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?