திருண்டார்கோவில் இருந்து கொத்தபுரிநத்தம் பிப்டிக் இண்டஸ்ட்ரியல் செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு மின்விளக்கு பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.