கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் பி.பி.எம். நகரில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தெருவிளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?