புவனகிரி அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள தெருமின் விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு வேளையில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?