இருள்சூழ்ந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2025-04-13 13:22 GMT

கீழப்பாவூர் பேரூராட்சி 17-வது வார்டு வட்டாலூர் என்ற ராமநாதபுரம் விலக்கு நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு மின்விளக்கு அமைக்கப்படாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவில் பஸ்சில் வருபவர்கள் பயணிகள் நிழற்கூடத்தில் இறங்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடம் முன்பு மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்