பழனி அருகே உள்ள மானூரில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்ததால் கம்பிகள் வெளியே தெரியும் படி காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.