பண்பொழி பேரூராட்சி கரிசல்குடியிருப்பு காலனியில் தெருவிளக்கு அமைக்கப்படாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு புதர்மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு அமைக்கவும், புதர் செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.