பந்தலூர் அருகே பிதிர்காடு சுங்கம் பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசர தேவைக்கு கூட இரவில் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.