அறுந்து விழுந்த மின்கம்பிகள்

Update: 2024-09-15 18:10 GMT

ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி ஏரி அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் அந்த வழியாக சென்று வருகின்றனர். அதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பற்றி தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அறுந்து விழுந்து உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-ராமசாமி, ஓமலூர்.

மேலும் செய்திகள்