"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-07-21 11:33 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள குளவாய்பட்டி கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து விபத்து ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை அமைத்து அதில் மின் இணைப்பு கொடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்