சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2024-07-21 10:20 GMT

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோக்கால் பகுதியில் இருந்து நடுக்கூடலூருக்கு இணைப்பு சாலை செல்கிறது. இதன் நடுவில் மின்கம்பம் உள்ளது. பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் அந்த மின் கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்