அடிக்கடி மின்தடை

Update: 2024-06-30 11:45 GMT

கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்சார வினியோகம் தடைபடுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக நடுவட்டம் பஜாரில் அடிக்கடி மின் வினியோகம் தடைபடுவதால், அன்றாட வேலைகளை கூட மேற்கொள்ள முடியாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்