சிதலமடைந்த மின்கம்பம்

Update: 2024-06-23 11:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் பழையனூர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் அதிகமான விரிசல்கள் காணப்படுகிறது. மேலும், தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் மின்கம்பம் விழுந்து விடுமே என அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆபத்தை அறிந்து மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்