திருவள்ளுர் மாவட்டம், அம்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஜி.என்.ஜி. 3-வது தெருவில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பெண்கள், முதியவர்கள் மிகுந்த அவதியடைகின்றனர். மேலும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.