மின்விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2024-06-16 12:11 GMT

கோவை நீலிகோணாம்பாளையம் இருகூர்-சின்னியம்பாளையம் ரோட்டில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் இந்த மின்கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். மேலும் வாகன விபத்துகளும் நடந்து வருகிறது. குறிப்பாக இருட்டை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கங்பங்களில் மின்விளக்குகள் பொருத்தி வௌிச்சம் கொண்ட வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்