அடிக்கடி மின்தடை

Update: 2024-06-09 10:45 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பாடியநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாதுரை தெரு, வள்ளலார் தெரு, கென்னடி தெரு ஆகிய பகுதிகளில் முறையான மின்வசதி இல்லை. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்பபடுகின்றனர். எனவே, இந்தப்பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்