மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-02 13:48 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி தெற்கு தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் இருந்து மேற்பகுதிவரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக சேதமடைந்த மின்கம்பம் இருக்கும் பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்