ஒளிராத மின்விளக்குகள்

Update: 2024-05-12 14:03 GMT

துடியலூர் விஸ்வநாதபுரம் 2-வது வீதியில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாகவே ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். இதேபோல் இருட்டை பயன்படுத்தி சில திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். ஆகவே ஒளிராத மின்விளக்குகளை சீரமைத்து ஒளிரச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்