சாலையின் நடுவே மின் இணைப்பு பெட்டி

Update: 2024-05-05 14:26 GMT

சென்னை எருக்கஞ்சேரி, கண்ணபிரான் கோவில் தெருவின் நடுவே மின் இணைப்பு பெட்டி உள்ளது. கடந்த மாதம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின் இணைப்பு பெட்டிகள் இடம் மாற்றி வைக்கப்பட்டன. தற்போது கால்வாய் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் மின் இணைப்பு பெட்டியை பழைய இடத்தில் திருப்பி அமைக்காமல் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்