அச்சுறுத்தும் மின்கம்பம்

Update: 2024-04-28 13:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் அதிகமான விரிசல்கள் காணப்படுகிறது. மேலும், அந்த பகுதி மக்கள் மின்கம்பம் உடைந்து விழுந்து விடுமே என அச்சத்தில் அதன் அருகிலேயே செல்வதில்லை. எனவே ஆபத்தை அறிந்து மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்