புகார்பெட்டி எதிரொலி; சேதமடைந்த மின்கம்பம் சீரமைப்பு

Update: 2024-04-28 10:56 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று இருந்தது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்பட்டது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டு இருந்தது. இது குறித்து "தினத்தந்தி" நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட மின்கம்பம் சீரமைக்கபட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்