மின் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-04-21 17:27 GMT

சின்னமனூர் கிழக்கு ரதவீதி, கச்சேரி காமுசந்தில் உள்ள கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இது அந்த வழியாக செல்லும் மின்சார கம்பியின் மீது விழுந்து தரையில் தேங்குகிறது. இதன்மூலம் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்