ஆபத்தான மின் கம்பங்கள்

Update: 2024-04-14 17:15 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், ஈகைடவுன் பகுதியில் சாலை ஓரத்தில் 2 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்