அடிக்கடி மின்தடை

Update: 2024-04-14 11:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அலமாதி ஊராட்சியில் மின்மாற்றி உள்ளது. இதில் அடிக்கடி பழுதி ஏற்படுவதால் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் மகப்பேறு சுகாதார மருத்துவனை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மின்தடை ஏற்பட்டதும் புகாா் அளித்தால் மின்வாரிய துறை ஊழியர்கள் காலதாமதமாக வந்து சரிபார்க்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்