எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2024-04-07 18:22 GMT
புதுப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே அரசூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு சில நாட்கள் மட்டுமே எரிந்த நிலையில் திடீரென பழுதானது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து கிடப்பதால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்