எரியாத மின் விளக்குகள்

Update: 2024-04-07 11:48 GMT

பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள லாடபுரம் பிரிவு சாலையில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே 2 சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்