ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-03-31 13:41 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், காடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்